வைர வரிகள்-2

--- "இதுவும் கடந்து போகும்"

--- துணிந்தவர் தோற்றதில்லை!!  தயங்கியவர் வென்றதில்லை!!

--- தோல்வி என்றால் இறைவன் உங்களை கைவிட்டு விட்டான் எனப்பொருளில்லை உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயித்துள்ளான் என்றே பொருளாகும்.

--- ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும் பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.

--- வாழ்க்கை என்பது புதிரும் அல்ல புதினமும் அல்ல புரிந்து கொண்டால்/
--- பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை/மழை என்பது நீருக்கு மரணம் இல்லை.

--- "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்" பாடல்.

--- காலுக்கு செருப்பு எப்படி வந்த்து முள்ளுக்கு நன்றி சொல்

--- "வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கனும்
போர்க்களம் மாறலாம் ; போர்கள் தான் மாறுமா?"

--- "வலி வந்து தானே வழி பிறக்கும்"

--- "யானையின் பலம் தும்பிக்கையிலே
மனிதனின் பலம் நம்பிக்கையிலே"

--- நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.

--- "எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்" பாடல்.

--- நல்லது செய்யாவிட்டாலும் தீமைசெய்வதயாவது
கைவிட வேண்டும்.

--- "தீதும் நன்றும் பிறர் தர வாரா!" - கணியன் பூங்குன்றனாரின்.

--- "ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு!" - நியூட்டனின் மூன்றாம் விதி.

--- "சுறுசுறுப்பான தேனீக்களுக்கு துக்கப்பட நேரம் இல்லை".

--- "Idle mind is devil's workshop".

--- ”எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.”

--- ”எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

--- ”எங்க விழுந்தோம்னு பார்க்குறதை விட எங்க வழுக்கினோம்னு பார்த்தா நல்லது.”

--- “எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்.
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.”

--- முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!

--- "தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?" பாடல். (முழு பாடல் இரண்டாம் பக்கம்)

--- நல்ல மனப்பாங்கை உருவாக்கிக்கொள்ள நீங்கள் விரும்பினால் இப்பொழுதே நம் வேலையைச் செய்ய வேண்டும்.

--- நாளை என்பது நிச்சயம் இல்லாத போது, இன்றைய வேலையை உடனே செய்ய உத்வேகம் வரும்.

--- “எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்”

--- “புரியாத பிரியம், பிரியும்போது புரியும்”

--- “இதயத்தில் எழுதிய உறவுகள் என்றும் இறப்பதில்லை”

--- “நீ வெளிச்சத்தில் இருந்தால் எல்லாம் உன்னைப் பின் தொடரும்
ஆனால் நீ இருட்டில் நுழைந்தால் உன் நிழல் கூட உன்னை பின் தொடராது”

--- “காலம் சில மனிதர்களை மறக்கக்கடிக்கும்
ஆனால் சில மனிதர்கள் காலத்தை மறக்கக்கடிப்பர்”

--- “வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு.அதில் நீ காரணம் இல்லாமல் ஒரு காயை நகர்த்தக்கூடாது.அப்படி தப்பான இடத்திற்கு நகர்த்தி விட்டால் பின்னர் அதை பழைய இடத்தில் வைப்பது கடினம்.”

--- நீ அமைதியாக இருக்கும் போது தைரியமாக இரு ஆனால் நீ வெற்றி பெரும் சமயத்தில் அமைதியாக இரு.ஏனென்றால் வாழ்க்கை என்பது விரல் ரேகையை போன்றது,பொய் அச்சு கொடுக்க முடியாது,கொடுக்கும் போது நல்ல அச்சாக இருக்க வேண்டும்.

--- "ஒவ்வொரு பூக்களுமே....சொல்கிறதே." பாடல்.

--- ”எல்லாம் நன்மைக்கே”.....

--- ”இறைவன் கொடுப்பதை தடுப்பவர் எவருமில்லை, இறைவன் தடுப்பதை கொடுப்பவர் எவருமில்லை"- நபிமொழி

--- கடவுளிடம் சொல்லாதோ உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று;
உன் பிரச்சனைகளிடம் சொல் உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று.

--- வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம்.

--- Winning horse does not know why it runs in race.
It runs because of beats and pains, Life is a race,GOD is ur rider
So, if u r in pain think GOD wants u to win.

--- தலைக்கு மேல் பறவை பறப்பதை உன்னால் தடுக்க முடியாது, ஆனால் அது உன் தலையில் கூடு கட்டுவதை உன்னால் தடுக்க முடியும்.

--- நண்பன் இல்லாத போது உன் கைத்தடியுடன் கலந்தாலோசனை செய்.

--- கற்பனைப் பேய்களைத்தவிர வேறு பேய்களில்லை.

--- வாங்குகிறவனுக்கு நூறு கண்கள் தேவை விற்பவனுக்கு ஒன்று போதும்.

--- ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான் மற்ற கையால் நம்மை அணைக்கிறான்.

--- உள்ளே நுழைய முன் வெளியே வருவதைப்பற்றி சிந்தனை செய்.

--- நீங்கள் அன்பு செலுத்தும் எதுவும் உங்களை விட்டு விலகினால் விட்டு விடுங்கள்...............
உங்கள் அன்பு நிஜமானது என்றால்
மீண்டும் அது உங்களிடமே திரும்ப வரும்.....!!!

--- "என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

--- "மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்.

--- விடியும் என்ற எண்ணத்தில் உறங்கச் செல்லும் நீ
முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு
அனைத்தையும் சாதிக்கலாம்!!

--- கோடி வந்தாலும் சரி கோடி போனாலும் சரி மனம் கோணாமல் இருப்பது ஒரு கோடி.

--- உன் கெளரவம் உன்னுடைய நாக்கு நுனியில் இருக்கிறது.

--- வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி சில சமயம் இருட்டு சில சமயம் முழு நிலவு.

--- எதிர்ப்பார்த்தவன் ஏமார்ந்து போகலாம். எதிர்ப்பாராதவனே மிகவும் பாக்கியச்சாலி.

--- உன் நண்பனை அளவோடு நேசி ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம். உன் எதிரியை அளவோடு வெறு ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம். - கீதை.

--- வாழ்க்கையில் வருவதை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள், நல்லதே நடக்கும்"

--- சிந்தித்து எதையும் செய்
செய்த பின் சிந்தியாதே!!!! (முழு கவிதை நான்காம் பக்கம்)

--- வசந்த வாழ்வைத்தேடி அலைவதை விட வாழும் வாழ்வை வசந்தமாக்கிக்கொள்வதே அறிவுடைமை.

--- நிதானத்தைக் கடைப்பிடி அதுவே வெற்றியின் முதற்படி.

--- அறிவை விட தைரியத்தினால் நிறைய விடயங்கள் சாதிக்கப்படுகின்றன.

--- நீ காட்டின் அருகாமையில் இருந்தாலும் விறகை சிக்கனமாகவே செலவிடு.

--- "சந்திப்போம் என்றா பிறந்தோம்... சந்திப்போம் என்றே பிரிவோம்..."

--- "வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல"

--- "கிட்டாதாயின் வெட்டென மற"

--- "எனது அனுமதியின்றி யாரும் என்னை காயப்படுத்த முடியாது"

--- சில நேரங்களில் சில மனிதர்கள்

--- வெற்றியாளர்கள் வேறு வேறு வகையான தொழில்களைச் செய்து வெற்றி பெறுவதில்லை. அனைவரும் செய்வதிலேயே சற்று வேறுபட்டு வித்தியாசமாக செய்து வெற்றியாளர்களாகிறார்கள்.

--- உனக்குள்ளே சக்தியிருக்கு அதை உசுப்பிட வழிபாரு சுபவேளை நாளை, மாலை சூடிடு.

--- ஒரு விதைக்குள்ளே அடைபட்ட ஆலமரம் கண்விழிக்கும் அதுவரை பொறு மனமே.

--- பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வைத்தாலும் பந்து வரும் தண்ணி மேலதான்!

--- முடிவு பண்ணி இறங்கிட்டன்...Feel பண்ண மாட்டேன்! Back அடிக்க மாட்டேன்! போய்கிட்டே இருப்பேன்.

--- நம்பிக்கை என்னும் நாரிருந்தால் உதிர்ந்த பூக்களும் ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக்கொள்ளும்.

--- கோபுரத்தின் கலசத்தில் எச்சமிடும் காகங்கள் ஆன போதும் சாமிக்கு வந்ததில்லை கோபங்கள்.

--- எல்லா இடங்களிலும் திருடர்கள் உண்டு கோவிலிலோ திருடுவதற்கென்றே சிலர் வருகிறார்கள் அதற்காக உண்மையான பக்தர்கள் மீது பழியைப் போடலாகாது. (கண்ணதாசன்)

--- மனத்திருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம், ஆடம்பரம் என்பது நாமாகத்தேடிக்கொண்ட வறுமை.

--- நீ ஒரு நண்பனைப் பெற விரும்பினால் ,நீயே ஒரு நல்ல நண்பனாக இருக்கப் பழகிக் கொள்.

--- மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.

--- 'எப்போது உன்னிடம் இருட்டை ஒளிமயமாக்க விளக்கு இல்லையோ... எப்போது வெளிச்சத்தைப் பயன்படுத்த முடியாதோ... அப்போது, இருட்டில் வழிதேட, இருட்டையே பயன்படுத்து!' -இந்தச் சூட்சுமத்தை அறிந்து விட்டால், மகிழ்ச்சி மறையாது!

--- எதிர்பார்க்காதவனுக்கு, எதிர்பாராத தருணங்களில், எதிர்பபார்க்காத திசைகளில் இருந்தெல்லாம் மகிழ்ச்சி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதீத கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாத மனிதனுக்கு, எல்லாக் காலங்களும் வசந்தகாலமே!

--- ”கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை; காற்று அடிக்காத திசை என்று எதுவுமில்லை.”

--- Never discuss ur success and never worry about ur failure.. because both will affect ur next step. Believe in urself, move on and win the goal.

Sourece: https://goo.gl/n1izic

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்