Self Confidence Poems and Quotes In Tamil

 வணக்கம் நண்பர்களே,ஒவ்வொரு மனிதனும் தன்னம்பிக்கையோடு வாழ்வது மிகவும் அவசியம். வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் நம்முடைய தன்னம்பிக்கையை இழக்க கூடாது. இந்த உலகத்தில் எல்லோரும் நமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இது போன்ற சூழ்நிலையில் நம்முடைய தன்னம்பிக்கையே நமக்கு  வாழ்கையில் கைகொடுக்கும். தன்னம்பிக்கை இருப்பதால் நாம் எந்த ஒரு காரியத்திலும் துணிச்சலுடன் செயல்பட முடியும். உங்களின் தன்னம்பிக்கை தான் என்றும் உங்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும். தன்னம்பிக்கையோடு வாழ்க்கையைக் கடந்து போவோம், வாழ்க்கையில் முன்னேறுவோம். இந்த பதிவில் தமிழில் எழுதிய Self Confidence Poems and Quotes-யை கொடுத்துள்ளோம்.



Self Confidence Poems and Quotes In Tamil


1. யாரும் உனக்கில்லை என 
நீ  நினைக்கும் போதெல்லாம்
நான் இருக்கிறேன் என்று சொல்லி 
உன்னை உற்சாகப்படுத்துவது 
உன் தன்னம்பிக்கையே



2. நாம் எந்தவொரு
இலட்சியத்தை அடைவதற்கும்
நம்முடைய தன்னம்பிக்கையே
நமக்கு துணையாக நிற்கும்



3. இந்த உலகம்
உன்னையும் உன் கனவுகளையும்
அலட்சியப்படுத்தும் போதெல்லாம் 
உன் தன்னம்பிக்கை தான் 
உனக்கு வழிகாட்டியாக இருக்கிறது



4. அயராத உழைப்பும்
விடாமுயற்சியும் 
தன்னம்பிக்கையும் 
இருந்தால் உன் வாழ்க்கையில் 
நீ வெற்றி பெறலாம்



5. உன்னிடம் இருக்கும் திறமைகளை
இந்த உலகுக்கு நீ வெளிப்படுத்த
உன் உற்ற நண்பனாக 
உன்னோடு இருப்பது 
உன் தன்னம்பிக்கை தான்



6. உன்னுடைய தன்னம்பிக்கை
ஒன்றே போதும் 
உன் இலட்சியம் பாதையில் 
நீ முதல் அடி எடுத்து வைப்பதற்கு



7. சிறு முயற்சியாக இருந்தாலும் 
அதனை முழுமனதுடன்  
தன்னம்பிக்கையோடு செய்தால் 
அதற்கான பலனை 
நீ நாளடைவில் பெறுவாய்



8. வாழ்க்கையில் வரும் 
சோதனைகளையும் தடைகளையும்
மனம் தளராமல்
நீ எதிர்கொண்டு விட்டால்
நீ வெற்றி பெறுவது உறுதியே



9. தன்னம்பிக்கை என்ற சுடர் தீபம்
உனக்குள் எரியும் வரை
உன் மனம் உடைந்து போகாது
உன்னை வீழ்த்தவே முடியாது



10. தோல்விகளைக் கண்டு 
அழுவ மாட்டாய்
அஞ்ச மாட்டாய்
தன்னம்பிக்கை என்ற 
சுடர் தீபம் உன்னுள் எரியும் போது



11. யார் உதவியுமின்றி 
உன் வாழ்க்கையை 
நீ சிறப்பாக வழிநடத்தி செல்ல 
என்றும் உன் மனசாட்சி 
சொல்வதைக் கேள்
உன் தன்னம்பிக்கையை
வளர்த்து கொள்



12. உன் தன்னம்பிக்கை 
உன்னோடு இருக்குமானால் 
நீ தனியாக நின்று ஜெய்திடலாம்
இந்த தரணியை நீ வெல்லலாம்



13. ஊர் ஆயிரம் சொல்லும்
அதனை பொருட்படுத்தாதே
உனக்கென்ன வேண்டும் 
என்பதை நீயே தீர்மானித்து 
உன் இலட்சிய பாதையில்
துணிந்து சென்று விடு
உன்னால் முடியும் வரை 
போராடி ஜெயித்து விடு



14. உன்னால் முடியும் என நம்பி 
எந்தவொரு காரியத்தையும் 
நீ செய்தால்
கஷ்டமான ஒரு வேலையைக் கூட 
நீ எளிதாக செய்து 
முடித்து விடுவாய்



15. வெற்றியோ தோல்வியோ
எதுவாக இருந்தாலும்
எல்லாமே வாழ்க்கையில் 
ஒரு அனுபவம் தான்



16. உன்னுடைய தன்னம்பிக்கையோடு 
வாழ்க்கையில் 
உழைத்து கொண்டே இரு
உன் உழைப்புக்கேற்ற ஊதியம் 
நிச்சயம் ஒரு நாள் 
உனக்கு கிடைக்கும்



17. எல்லா சூழ்நிலைகளிலும் 
யாரவது நமக்கு உதவுவாரா 
என்று எதிர்பார்க்காதே
உன் பிரச்சனைகளை நீயே 
எதிர்த்து போராட பழகி கொள்
உன் ஆற்றலை வளர்த்து கொள்



18. எனக்கு எதுவும் தெரியாது
என்று கூறுவதை விட
உனக்கு தெரியாதவற்றை 
எப்படியாவது 
கற்று கொள்ள வேண்டும் 
என்ற ஆர்வத்தோடு
உன் வாழ்க்கைக்குத்  
தேவையான அறிவை கற்று கொள்



19. உன் இலட்சியத்தை அடைய 
நீ போடும் ஒவ்வொரு திட்டங்களும்
நீ எடுக்கும் ஒவ்வொரு முடிவுளும்
உன் வெற்றியை
த் 
தீர்மானித்து விடும்
எந்த ஒரு செயலையும் 
சிந்தித்து  செய்வதே சிறப்பு



20. உன் வெற்றியைக் கண்டு
உன்னை பாராட்டும் பலர்
உன் தோல்வியில்
உன்னுடன் இருக்க மாட்ட்டார்கள்
அதற்காக வருத்தப்பட்டு
உன் தன்னம்பிக்கையை என்றும்
நீ இழந்து விட கூடாது



21. நீ போகும்
உன்னுடைய இலட்சிய பாதை
தூரமாக இருக்கலாம்
அதனால் சோர்ந்து விடாதே
உன்னுடைய தன்னம்பிக்கையோடு
உன் எதிரில் வரும்
எல்லா சோதனைகளையும்
சந்திக்க துணிந்து நில்



22. உன் வாழ்க்கையில்
நீ வெற்றி பெற
வீரமும் வேண்டும் 
விவேகமும் வேண்டும்



23. உடம்பில் தெம்பும்
மனதில் தன்னம்பிக்கையும் 
இருக்கும் வரை
ஒரு மனிதன் யாரையும் எதிர்பார்க்காமல்
சுயமாக உழைத்து வாழ்கிறான்



24. உன் மனதில் 
தன்னம்பிக்கையும்
மன வலிமையும் இருக்கும் வரை
உன் 
அறிவும் திறமையும்   
ஒரு போதும் உன்னை 
கைவிட்டு விடாது
இந்த மண்ணில் என்றும் 
உன்னை சிறப்பாக
வாழ வைக்கும்



25. நேற்று இருப்பது
இன்று இல்லை
இந்த உலகில் 
எதுவும் நிரந்தரமில்லை
இறுதி வரை
உனக்கு துணை நீ மட்டும் தான்
என்பதை உணர்ந்து விடு
உன் வாழ்க்கையின் 
நோக்கத்தை அறிந்து விடு



26. வெற்றி என்பது 
அதிர்ஷ்டத்தினால் வருவதில்லை
நீ அனுதினமும் உழைத்து
தன்னம்பிக்கையோடு 
இருந்தால் மட்டுமே
ஒரு நாள் அது 
உன்னை வந்தடையும்
இந்த உலகம் உன்னை பாராட்டும்



27. நம்மால் முடியும் வரை 
தன்னம்பிக்கையோடு 
முயற்சி செய்ய வேண்டும்
அதுவும் ஒரு செயலை 
வெற்றிகரமாக செய்து 
முடிக்கும் வரை 
முயற்சி செய்ய வேண்டும்



28. பிறர் மேல் வைக்கும் 
நம்பிக்கையை நம் மேல் 
நாம் வைக்காமல் 
இருப்பதால் தான் 
நாம் சில சமயங்களில் 
ஏமார்ந்து போகிறோம்



29. நம் வாழ்க்கையை 
நாம் தான் உருவாக்கி 
கொள்ள வேண்டும்
அதற்கு தன்னம்பிக்கை 
நமக்கு மிகவும் அவசியம்



30. நீங்கள் வாழ்க்கையில் 
எத்தனை முறை வீழ்ந்தாலும் 
உங்களை மீண்டும் 
தூக்கி விட இருக்கும்
ஒரு ஆயுதம் தான்
தன்னம்பிக்கை



31. உங்கள் தன்னம்பிக்கையால் 
உங்களின் திறமைகளைச் 
நீங்கள் சரியான விதத்தில் 
பயன்படுத்தினால் நிச்சயம் 
நீங்கள் வெற்றி பெறலாம்



32. வாழ்க்கையில் 
கடினமாக உழைத்தால் 
மட்டும் போதாது
விடாமுயற்சியோடும் 
தன்னம்பிக்கையோடும் 
உழைக்க வேண்டும்



33. தன்னம்பிக்கையோடு 
வாழ்பவர்கள் 
வாழ்க்கையின் சவால்களைக் 
கண்டு அஞ்சுவதில்லை



34. வாழ்க்கையில் 
ஒவ்வொரு சவால்களையும் 
எதிர்த்து போராடினால் தான்
வாழ்க்கையை
ப் பற்றி 
நாம் புரிந்து கொள்ள வேண்டும்
எந்த சூழ்நிலையிலும் 
தன்னம்பிக்கையை 
மட்டும் இழந்து விடாதீர்கள்



35. தோல்விகளைச் சந்திக்கும் 
போதெல்லாம் மீண்டும் 
வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் 
என்ற தன்னம்பிக்கையோடு 
இருங்கள்



36. எல்லோரும் என்னை
கைவிட்ட பிறகு 
என்னோடு இருப்பது 
என்னுடைய தன்னம்பிக்கை 
மட்டும் தான்



37. ஆயிரம் பேர் நம்முடைய 
பிரச்சனைக்கு 
ஆலோசனைகள் கூறினாலும்
அந்த பிரச்சனைக்கான தீர்வு 
நம் கையில் தான் இருக்கிறது



38. நம்முடைய அனைத்து 
கஷ்டங்களும் 
ஒரு நாள் மாறி விடும்
ஆனால் ஒரே நாளில் மாறி விடாது
தன்னம்பிக்கையோடு 
ஒவ்வொரு சவாலான 
நாளையும் கடந்து செல்வோம்



39. நம் மேல் நாம் 
நம்பிக்கை வைத்து 
எந்த ஒரு செயலையும் 
சிந்தித்து செயல்பட வேண்டும்



40. தோல்விகளில் தான் 
நம்முடைய வெற்றிக்கான 
ரகசியம் இருக்கிறது
அதனை கண்டறிந்து 
மீண்டும் முயற்சி 
செய்வபர்களுக்கே 
வெற்றி சொந்தமாகிறது



41. வாழ்க்கையில் 
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு 
முடிவிலும் உறுதியாக இருங்கள்
வாழ்க்கையில் எங்கும் எப்போதுமே
தன்னம்பிக்கையோடு இருங்கள்



42. இந்த உலகம் உங்களுக்கு 
உதவி செய்யாவிட்டாலும்
உங்களின் தன்னம்பிக்கை தான் 
உங்களுக்கு உதவி செய்யும்



43. வாழ்க்கையில் நீ அனைத்தையும்
இழந்த பிறகும்
உன் தன்னம்பிக்கையால் மீண்டும் 
நீ இழந்ததை எல்லாம் பெற முடியும்



44. சில சமயங்களில் 
நமக்கு நாமே கூறும் 
ஆறுதல் தான் 
நம்மை வாழ்க்கையில் 
உயர்த்துகிறது



45. உன் உள்ளத்தில் 
தன்னம்பிக்கை இருந்தால் 
உலகத்தில் நீ சிறப்பாக வாழலாம்



46. இந்த உலகத்தில் 
உன்னை நன்கு 
புரிந்து வைத்திருப்பது 
நீ என்கின்ற போது
உன் மீது முதலில் நம்பிக்கை வை
உன் இலட்சியத்தை 
அடைய நாளும் முயற்சி செய்



47. யாருடைய உதவியும் இல்லாமல் 
இன்று வாழ்க்கையில் 
நான் வெற்றி அடைய 
காரணமாக இருந்தது 
அன்று என் மேல் 
நான் வைத்த நம்பிக்கை தான்

Source: https://go.ly/bVpDA

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்